Advertisement

உலகளந்த பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு திருப்பாவாடை தளிகை படையல்!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனிக் கிழமையை முன்னிட்டு தேகளீச பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் மற்றும் திருப்பாவாடை தளிகை படையல் நடந்தது.

திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசிமாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 4:30 மணிக்கு மூலஸ்தானத்தில் திருவிக்ரமன் விஸ்வரூபதரிசனம், 5:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமறை, 7:30 மணிக்கு நித்யதிருவாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு மணிக்கு ஸ்ரீ தேவி பூதேவி சமேத தேகளீச பெருமாள் கண்ணாடிஅறை மண்டபத்தில் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம், 12:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடந்தது. தொடர்ந்து திருப்பாவாடை தளிகை படையளிடப்பட்டு மகா தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement
 
Advertisement