Advertisement

திருத்தணி கோவிலில் வரும் 31ல் கந்த சஷ்டி விழா

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வரும், 31ம் தேதி, கந்த சஷ்டி விழா துவங்கி, அடுத்த மாதம், 6ம் தேதி வரை நடைபெறுகிறது.திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தீபாவளி மறுநாள் முதல், கந்த சஷ்டி விழா, ஏழு நாட்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டிற்கான, கந்த சஷ்டி விழா, வரும் 31ம் தேதி துவங்குகிறது. அன்று, காலை 10:00 மணிக்கு மூலவருக்கு புஷ்ப அலங்காரம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, 1ம் தேதி மூலவருக்கு பட்டு, 2ம் தேதி தங்ககவசம், 3ம் தேதி திருவாபரணம், 4ம் தேதி வெள்ளி கவசம், 5ம் தேதி சந்தன காப்பு போன்ற அலங்காரம் நடைபெறுகிறது. சண்முகப்பெருமானுக்கு, 31ம் தேதி முதல் 6ம் தேதி வரை லட்சார்ச்சனையும், 5ம் தேதி மாலையில் புஷ்பாஞ்சலி, 6ம் தேதி நண்பகலில் திருக்கல்யாணம் நிகழ்ச்சியுடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

Advertisement
 
Advertisement