Advertisement

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா அக்.31 ல் துவக்கம்

துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் முருகன் கோயில் கந்த சஷ்டி விழா அக்., 31 ல் துவங்குகிறது.நவ., 5 ல் சூரசம்ஹாரம் 6ம்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது. அக்.,31 ல் திங்கள் கிழமை காலை 6 முதல் 6.30க்குள் ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார். யாகசாலை பூஜை துவங்கு கிறது. காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாரதனை நடக்கிறது.

சூரசம்ஹாரம்: 6 ம் நாள் விழா நவ., 5 ம் தேதி சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு மேல் கடற்கரையில் உள்ள சஷ்டி மண்டபத்தில் ஜெயந்தி நாதர் எழுந்தருளுவார். 4.30 மணிக்கு மேல் சூரசம்ஹாரம் நடக்கிறது.திருக்கல்யாணம்: ஏழாம் நாள் விழா நவ.,6 ஞாயிற்றுக் கிழமை மாலை 6.30 மணிக்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் மாலை மாற்றுதலும், இரவு திருக்கல்யாணமும் நடக்கிறது.திருவிழா காலங்களில் கோயில் கலை அரங்கில் காலை, மாலையில் சிறப்பு சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Advertisement
 
Advertisement