Advertisement

நாகாலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

ஆர்.கே.பேட்டை: தாமனேரி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாகாலம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும், 7ம் தேதி நடைபெறஉள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பகுதிவாசிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஆர். கே. பேட்டை அடுத்த , தாமனேரி கிராமத்தின் கிழக்கே உள்ள குளக்கரையில் நாகாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலை விரிவுபடுத்தி, புதிதாக கட்டும் பணி, ஓராண்டாக நடந்து வருகிறது. தற்போது, வண்ணம் பூசும் ப ணிகள் நடந்து வருகின்றன. வரும் 7ம் தே தி, கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது. இதற்கான யாகசாலை பூஜை 6ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, காலை 9:00 மணிக்கு, கணபதி பூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து நவகிரக சாந்தி, பூர்ணாஹூதி நடக்கிறது. மாலை 4:00 மணிக்கு, வாஸ்து சாந்தி, அதை த�ொட ர்ந்து கதாகாலாட்சேபம் நடைபெறும். மறுநாள் 7ம் தேதி, காலை 6:30 மணிக்கு, கலச பூஜையும், தொடர்ந்து 7:00 மணிக்கு கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட உள்ளது. இரவு 7:00 மணிக்கு, அம்மன் வீதியுலா எழுந்தருளுகிறார்.

Advertisement
 
Advertisement