Advertisement

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நவ.,14 ல் அன்னாபிஷேக விழா

கரூர்: கரூர், கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், நவ.,14ல் அன்னாபிஷேக விழா நடக்கிறது. கரூர் அலங்காரவல்லி, சவுந்தரநாயகி உடனுறை கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், வரும் நவ.,14 மாலை, 5:00 மணிக்கு பசுபதீஸ்வரர் சுவாமி, நாகேஸ்வர சுவாமி, கரியமாலீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. அன்னாபிஷேக விழாவில், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ய, இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ராசாராம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement
 
Advertisement