Advertisement

திருப்பரங்குன்றம் கோயிலில் டிச.13 வரை தங்கரதம் இல்லை!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தினம் இரவு 7:00 மணிக்கு தங்க ரதம் புறப்பாடு நடக்கும். கோயிலில் கார்த்திகை தீப திருவிழா டிச.,4ல் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் இரவு 8:00 மணிக்கு சுவாமி புறப்பாடு நடக்கிறது. திருவிழா டிச., 13ல் நிறைவடைகிறது. அன்று வரை கோயிலில் தங்க ரதம் புறப்பாடு இல்லை என கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை தெரிவித்தார்.

Advertisement
 
Advertisement