Advertisement

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் திருமங்கையாழ்வார் தினவிழா

திருப்புத்துார், திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் டிச.,12ல் திருமங்கையாழ்வார் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. ஆழ்வார்கள் விஷ்ணுவின் அதி தீவிர பக்தர்கள் ஆவார்கள். பன்னிரெண்டு ஆழ்வார்களில் 8ம் நுாற்றாண்டில் அவதரித்தவர் திருமங்கையாழ்வார். இவர் பெருமாளை துதித்து 1253 பாசுரங்கள் பாடியவர். அதில் திருக்கோஷ்டியூர் ஸ்ரீஉறங்கா மெல்லணையானுக்காக 39 பாசுரங்கள் பாடினார். அவர் அவதரித்த டிச.,12ல் கார்த்திகை நட்சத்திரத்தில் திருக்கோஷ்டியூர் கோயிலில்காலை 9 மணிக்கு சிறப்பு பிரார்த்தனை வழிபாடும், மதியம் அன்னதானமும் நடைபெற உள்ளது.ஏற்பாட்டினை ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் அன்னதானக்குழுவினர் செய்கின்றனர்.

Advertisement
 
Advertisement