Advertisement

சிவாலயங்களில் சனிப்பிரதோஷம் கோலாகலம்

மதுரை: சிவாலயங்களில் நடந்த சனிப்பிரதோஷ விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். சிவபெருமான் விஷத்தை உண்ட தினம் சனிக்கிழமை, அந்நாளில் வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. மாலை, 4:30 மணிக்கு சிவபெருமான், நந்தியம் பெருமான் ஆகியோருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அருகம்புல், மலர்மாலைகளால் நந்தியம்பெருமான் அலங்கரிக்கப்பட்டார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத சனிபிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே உள்ள நந்தி பெருமானுக்கு நடந்த பல்வேறு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம்: சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சத்தியகிரீஸ்வரர், கம்பத்தடி மண்டபத்திலுள்ள மெகா நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடந்தது.

திருநகர்: சித்தி விநாயகர் கோயிலில் தனிசன்னதியில் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதர், தென்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவபெருமான், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில், கோயில் வளாகத்திலுள்ள பசுபதீஸ்வரர் கோயில், சூட்டுக் கோல் ராமலிங்க விசாலம், மலைமேலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது.

Advertisement
 
Advertisement