Advertisement

மழைவேண்டி தெருக்கூத்து: மன்மதன் - ரதி காமன் விழா

பெத்தநாயக்கன்பாளையம்: பேளூர் கரடிப்பட்டியில், மழைவேண்டி மன்மதன் - ரதி காமன் நிகழ்ச்சி நடந்தது. சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த, பேளூர் கரடிப்பட்டியில், கலக்காம்பாடி காளியம்மன் நாடகக்குழு சபா சார்பில், அரவான் கடபலி தெருக்கூத்து நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு துவங்கி நேற்று அதிகாலை, 5:00 வரை நடந்தது. இதில், அரவான் வாழ்க்கை வரலாறு குறித்தும், மழைவேண்டியும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக இன்று இரவு, 9:30 மணிக்கு மேல், அபிமன்பு மன்னன் சுந்தரி திருக்கல்யாணம் தெருக்கூத்து நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை மன்மதன் - ரதி காமன் விழா குழுவினர் மற்றும் ஊர் பெரிய தனக்காரர்கள் செய்துள்ளனர்.

Advertisement
 
Advertisement