Advertisement

பழநி திருஆவினன்குடி கோயிலில் வருடாபிஷேகம்

பழநி : பழநி திருஆவினன்குடி கோயிலில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு 108 சங்காபிஷேகம், சிறப்பு யாகபூஜை நடந்தது. மூன்றாம்படை வீடு என அழைக்கப்படும் பழநி திருஆவினன்குடி கோயிலில் வருடாபிகேஷக விழாவை முன்னிட்டு முன்மண்டபத்தில் புனிதநீர் நிரப்பிய கும்பகலசங்கள் மற்றும் வேல்வடிவில் 108 சங்குகள் வைத்து சிறப்புயாக பூஜை நடந்தது. அதன்பின் உச்சிக்காலபூஜையில் மூலவர் குழந்தைவேலாயுத சுவாமிக்கு கும்பகலசநீர், 108 சங்காபிஷேகம் நடந்தது. இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா மற்றும் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement
 
Advertisement