Advertisement

வெள்ளி கவசத்தில் சேலம் ராஜ கணபதி அருள்பாலிப்பு

சேலம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, வெள்ளிகவச அலங்காரத்தில், சேலம் ராஜகணபதி நேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம், தேரடி வீதியில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. கடந்த, 23ல், விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு அதிகாலை பூஜை நடந்தது. பின்னர், 108 லிட்டர் பால் கொண்டு சிறப்பு அபி ?ஷகம் செய்யப்பட்டது. மாலை, 6:45 மணிக்கு ராஜகணபதிக்கு வெள்ளி கவசம் சாத்துபடி செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு விதமான மலர்களை கொண்டு, அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் கோவிலில் தொடங்கி, முக்கிய வீதிகளின் வழியாக சுவாமி திருவீதி உலா வந்தார்.

Advertisement
 
Advertisement