சேலம்: விநாயகர் சதுர்த்தியையொட்டி, வெள்ளிகவச அலங்காரத்தில், சேலம் ராஜகணபதி நேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம், தேரடி வீதியில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. கடந்த, 23ல், விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது. நேற்று காலை, 6:00 மணிக்கு அதிகாலை பூஜை நடந்தது. பின்னர், 108 லிட்டர் பால் கொண்டு சிறப்பு அபி ?ஷகம் செய்யப்பட்டது. மாலை, 6:45 மணிக்கு ராஜகணபதிக்கு வெள்ளி கவசம் சாத்துபடி செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு விதமான மலர்களை கொண்டு, அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் கோவிலில் தொடங்கி, முக்கிய வீதிகளின் வழியாக சுவாமி திருவீதி உலா வந்தார்.
வெள்ளி கவசத்தில் சேலம் ராஜ கணபதி அருள்பாலிப்பு
பதிவு செய்த நாள்: செப் 05,2017