Advertisement

புதுச்சேரியில் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி

புதுச்சேரி : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, புதுச்சேரியில் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி பாண்டுரங்க பஜன் சமாஜ் சார்பில், நேற்று மாலை 6:15 மணிக்கு, லாஸ்பேட்டை விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில், நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடந்தது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடந்த இந்நிகழ்ச்சியில், சென்னையை சேர்ந்த காயத்ரி மகேஷ் மற்றும் குழுவினர் பங்கேற்றனர்.

Advertisement
 
Advertisement