Advertisement

திருவண்ணாமலை கோயிலுக்கு திருக்குடை காணிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, சென்னையை சேர்ந்த அருணாச்சலா ஆன்மீக பக்தர்கள் சேவா சங்கம் சார்பில், 10 திருக்குடைகளை மாடவீதி உலா வந்து வழங்கினர்.

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா, நேற்று முன்தினம் இரவு, நகர காவல் தெய்வமான துர்க்கையம்மன் உற்சவத்துடன் துவங்கியது. நேற்று இரவு, 9:00 மணிக்கு, அருணாசலேசுவரர் கோவிலில் உள்ள பரிவார தேவதையான பிடாரி அம்மன் மற்றும் சப்த கன்னிமார்களுக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, விழா நன்றாக நடக்க வேண்டி, வழிபாடு நடத்தப்பட்டது. இன்று( நவ.22) சென்னையை சேர்ந்த அருணாச்சலா ஆன்மீக பக்தர்கள் சேவா சங்கம் சார்பில், 10 திருக்குடைகளை மாடவீதி உலா வந்து வழங்கினர். விதவிதமான வாதிய குழுக்களுடன் திருக்குடை ஊர்வலம் நடைபெற்றது. தீப திருவிழாவை முன்னிட்டு மாட வீதியில் உள்ள பெரிய தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement
 
Advertisement