Advertisement

சிவகங்கை செல்வகணபதி கோயிலில் வருடாபிஷேகம்

சிவகங்கை: சிவகங்கை, நேருபஜார், செல்வகணபதி கோயிலில் வருடாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் காலை விக்னேஷ்வர பூஜை, 2 ம் கால யாக பூஜை.மற்றும் புனிதநீர் அபிஷேகம் நடைபெற்றது. வருடாபிஷேகத்தை முன்னிட்டு அம்மன் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை சகஸ்ரநாம 1008 அர்ச்சனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement