சிவகங்கை: சிவகங்கை, நேருபஜார், செல்வகணபதி கோயிலில் வருடாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் காலை விக்னேஷ்வர பூஜை, 2 ம் கால யாக பூஜை.மற்றும் புனிதநீர் அபிஷேகம் நடைபெற்றது. வருடாபிஷேகத்தை முன்னிட்டு அம்மன் அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை சகஸ்ரநாம 1008 அர்ச்சனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சிவகங்கை செல்வகணபதி கோயிலில் வருடாபிஷேகம்
பதிவு செய்த நாள்: டிச 06,2017