Advertisement

ஹிந்து - முஸ்லிம் இணைந்த மகர சங்கராந்தி கொண்டாட்டம்

தானே, மஹாராஷ்டிர மாநிலம், பிவாந்தியில், மகர சங்கராந்தி பண்டிகையை, முதன்முறையாக, ஹிந்துக்களுடன் இணைந்து, முஸ்லிம்களும் கொண்டாடினர். முதன்முறை தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை போல், மஹாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில், மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாளாகவும், சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

மஹாராஹ்டிர மாநிலம், தானே அருகில் உள்ள, பிவாந்தியில், முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இங்கு, அடிக்கடி மதக் கலவரங்கள் ஏற்படுவது வழக்கம். 1970 மற்றும் 1984ல், இங்கு ஏற்பட்ட கலவரம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிலையில், இங்கு வசிக்கும் இளைய தலைமுறையைச் சேர்ந்த சிலரது முயற்சியால், முதன்முறையாக, நேற்று முன்தினம், மகர சங்கராந்தியை, ஹிந்துக்களுடன் இணைந்து, முஸ்லிம்களும் கொண்டாடினர். வாழ்த்துகுறிப்பாக, இரு மதங்களைச் சேர்ந்த பெண்கள், ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை பரிமாறி, வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். இந்த பகுதியில் வசிக்கும், அப்பாஸ் குரேஷி, 78, என்பவர் கூறியதாவது:இரு தரப்பினருக்கு இடையே நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையிலும், சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், இரு மதங்களைச் சேர்ந்தவர்களும் இணைந்து, இந்த பண்டிகையை கொண்டாடினோம். இளைஞர்களின் முயற்சியால், இந்த பாராட்டத்தக்க செயல் நடந்தது. இரு தரப்பினரும் இணைந்து, மகர சங்கராந்தியை கொண்டாடுவது, இதுவே முதன்முறை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Advertisement