Advertisement

சவுண்டம்மன் கோவில் விழா: மகாஜோதி திருவீதி உலா

குமாரபாளையம்: குமாரபாளையம், சவுண்டம்மன் கோவில் திருவிழாவில், மகாஜோதி திருவீதி உலா நடந்தது. குமாரபாளையம், சவுண்டம்மன் கோவில் திருவிழாவில், கடந்த, 13ல் காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல் வைபவம், 14ல் சாமுண்டி அழைத்தல், மாலை, பெரிய பொங்கல் பூஜை நடந்தது. நேற்று இரவு, மகாஜோதி வீதி உலா நடந்தது. வீரக்குமாரர்கள் கத்தி போட்டவாறு, ஜோதி வடிவிலான அம்மனை அழைத்து வந்தனர். முக்கிய வீதிகளின் வழியாக சென்ற ஊர்வலம், கோவில் வளாகத்தில் நிறைவு பெற்றது. பெண்கள் சாலைகளில் தண்ணீர் ஊற்றி, வண்ண கோலங்களிட்டு, அம்மனை வரவேற்றனர். இன்று காலை, 7:00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு மெரவனை, மாலை, 6:00 மணிக்கு அம்மன் கோவிலில் இருந்து, அலங்கார வீதி உலா, வாணவேடிக்கை நடக்கவுள்ளது. விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Advertisement
 
Advertisement