Advertisement

ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் திருக்கல்யாணம் விழா: மார்ச் 22ல் துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் திருக்கல்யாணம் விழா மார்ச் 22ல் கொடியேற்றுடன் துவங்குகிறது. அன்று காலை 8:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கும் விழா, 13 நாட்கள் நடக்கிறது. விழாவில், தினமும் காலையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவில் வீதியுலாவும் நடக்கிறது. மார்ச் 30 காலை 7:05 மணிக்கு செப்புத்தேரோட்டம், மாலை 6:25 மணிக்கு ,கோயில் முன்புள்ள பந்தல் மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏப்ரல் 3 ல் ஆண்டாள் சன்னதியில் புஷ்பயாகம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் நாகராஜன் செய்கின்றனர்.

Advertisement
 
Advertisement