Advertisement

நாமக்கல் நரசிம்மசுவாமி சுற்றுக்கோவில் கும்பாபிஷேக விழா

நாமக்கல்: நரசிம்மசுவாமி கோவில் வளாகத்தில், சுற்றுக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. நாமக்கல் நரசிம்மசுவாமி கோவில் வளாகத்தில் லட்சுமி நாராயணன், சேனை முதல்வர், உடையவர், ராமர் சீதை லட்சுமணன், நம்மாழ்வார், கிருஷ்ணர் மற்றும் தேசிகர் சுவாமி ஆகிய சுற்றுக்கோவில்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவில்களின் கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம் மாலை, சிறப்பு ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று காலை, 5:00 மணிக்கு புன்யாக வாசனம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. 6:30 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement
 
Advertisement