Advertisement

சின்ன காஞ்சிபுரம் திரவுபதியம்மன் கோவிலில் ஊஞ்சல் சேவை

காஞ்சிபுரம்: சின்ன காஞ்சிபுரம் திரவுபதியம்மன் கோவிலில், ஊஞ்சல் சேவை உற்சவம் நடந்தது. சின்ன காஞ்சிபுரம் கோகுலம் தெருவில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஊஞ்சல் சேவை துவங்கி, ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி, காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. ‘திரவுபதியம்மன் பிறப்பு’ என்ற தலைப்பில், ஜெ.ராமானுஜம், சொற்பொழிவாற்றினார். மாலை, 7:00 மணிக்கு, திரவுபதியம்மன் ஊஞ்சல் சேவையில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Advertisement
 
Advertisement