Advertisement

சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா முகூர்த்தக்கால் நடுதல்

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் தொடக்கமாக முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது. பரமக்குடியில், மதுரை அழகர் கோயிலைப் போன்று சித்ரா பவுர்ணமி அன்று கள்ளழகர் வைகையில் இறங்கும் விழா நடப்பது வழக்கம். முன்னோட்டமாக நேற்று காலை 5:30 மணிக்கு முகூர்த்தக்காலானது, கோயில் அர்ச்சகர்கள் வேத, மந்திரம் முழங்க நடப்பட்டது. ஏப்.25ல் சித்திரைத் திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கி, ஏப். 29 ல் இரவு 2 மணிக்கு மேல் சுந்தரராஜப் பெருமாள், தீ வர்த்திகள் வெளிச்சத்தில் வைகை ஆற்றில் இறங்கவுள்ளார்.

Advertisement
 
Advertisement