Advertisement

திரவுபதியம்மன் தீமிதி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருத்தணி : திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, நேற்று அதிகாலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. அடுத்த மாதம், 6ம் தேதி, தீமிதி திருவிழா நடைபெறுகிறது. திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள புராதன திரவுபதியம்மன் கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.காலை, 8:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பும், மாலை, 6:00 மணிக்கு சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். வரும், 23 முதல், மே, 6ம் தேதி வரை இரவு, 10:00 மணிக்கு, மகா பாரத நாடகம் நடைபெறும். வரும், 25ம் தேதி, திரவுபதியம்மன் திருக்கல்யாணமும், 27ல், சுபத்திரை திருக்கல்யாணமும், திருவிளக்கு பூஜை மற்றும் புஷ்ப பல்லக்கும் நடக்கிறது. மே, 6ல், துரியோதனன் படுகளம் மற்றும் தீ மிதி திருவிழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement