Advertisement

ரெங்கநாத பெருமாள் கோயிலில் தேரோட்டம்

தேவகோட்டை: தேவகோட்டை ரெங்கநாத பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடந்தது. கடந்த மே 4 ந்தேதி காப்பக்கட்டுதலுடன் விழா தொடங்கியது. ஒவ்வொரு நாள் இரவும் சுவாமி உலா வந்தார். நேற்று மாலை 4:30 மணிக்கு ரெங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் திருத்தேரில் எழுந்தருளினார். நான்கு ரதவீதிகள் வழியாக தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. பின், ரெங்கநாத பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

Advertisement
 
Advertisement