Advertisement

குபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம்

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், ஷீரடி குபேர சாய்பாபா கோவில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது.மாமல்லபுரம், ஸ்ரீரடி குபேர சாய் அறக்கட்டளைசார்பில், இங்குள்ள ஐந்து ரதங்கள் அருகில், ஷீரடி குபேர சாய்பாபா கோவில், ஓராண்டிற்கு முன், கருவறை மண்டபத்துடன், சிலை மட்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, தற்போது, கருவறை விமானம், முன் மஹா மண்டபம் அமைக்கப்பட்டு, நேற்று, மஹா கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு, கடந்த 18ல் இருந்து விதவிதமான வழிபாடுகள் நடந்தன. நேற்று காலை, நான்காம் கால வழிபாடு முடிந்து, காலை, 9:50 மணிக்கு, சன்னதி விமானம், அடுத்து, மூலஸ்தானம், துவாரகாமாயி, குருஸ்தானத்திற்கு, புனித நீரூற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

Advertisement
 
Advertisement