Advertisement

மயிலம் முருகர் கோவிலில் வைகாசி கிருத்திகை விழா

மயிலம்;மயிலம் முருகர் கோவிலில் வைகாசி மாத கிருத்திகை விழா நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர் சுவாமி கோவில், வைகாசி மாத கிருத்திகை விழாநடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர் சுவாமிக்கு காலை 11:00 சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மூலவர் தங்க கவச அங்காரத்தில் அருள் பாலித்தார். பிற்பகல் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு 7:30 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர் சுவாமி, வெள்ளி தேரில் மலை வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய் தனர். இரவு 9:00 மணிக்கு உற்சவர் மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். விழா ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.

Advertisement
 
Advertisement