Advertisement

தர்மபுரி நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா

தர்மபுரி: ஆனித் திருமஞ்சன விழாவை முன்னிட்டு, தர்மபுரி குமார சாமிப்பேட்டை சிவகாமசுந்தரி சமேத நடராஜர் கோவிலில், சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கடந்த, 18ல், காலை, 10:00 மணிக்கு, திருவாசகம் முற்றோதல் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, மாணிக்கவாசகர் வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நாளான, நேற்று காலை, 4:00 மணிக்கு, அம்பலக் கூத்தனுக்கு, மகா அபி ஷேகம் நடந்தது. 10:00 மணிக்கு, பால், சந்தனம், குங்கும், மஞ்சள் அபி?ஷகங்கள் நடந்தன. தொடர்ந்து, வாழை, கொய்யா, பலா, மாதுளை, திராட்சை உள்ளிட்ட, 300 கிலோ எடை கொண்ட பழங்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, தங்கக் கவச அலங்காரத்தில், சிவகாமசுந்தரி சமேத நடராஜர் ஆனித் திருமஞ்சன தரிசனம் நடந்தது.

Advertisement
 
Advertisement