Advertisement

பழநியில் ரோப்கார் நிறுத்தத்தால் பிசியான வின்ச்கள் : 3 மணிநேரம் காத்திருப்பு

பழநி : பழநி முருகன் கோயில் , ரோப்கார் நிறுத்தம் காரணமாக, மூன்று வின்ச் களும் காலை முதல் இரவு வரை இயக்கப்படுகிறது. பழநி மலைக்கோயிலில் மூன்று நிமிடங்களில் செல்லும் ரோப்கார் ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஜூலை 12 முதல் நிறுத்தியுள்ளனர். மலைக்கு செல்வதற்கு காலை 5:30மணி முதல் இரவு 10:00மணி வரை தொடர்ந்து மூன்று வின்ச்களும் இயங்குகிறது. நேற்று ஞாயிறு விடுமுறை தினத்தில் குவிந்த பக்தர்கள், வின்ச் ஸ்டேசனில் 3 மணிநேரத்திற்கு மேல் காத்திருந்தனர். அதிகநேரம் காத்திருப்பதை தவிர்க்க படிப்பாதை, யானைப்பாதை வழியாக மலைக்கு செல்ல பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டனர். மலைக்கோயில் பொதுதரிசனம் வழியில் ஒருமணிநேரம் வரை காத்திருந்து முருகரை தரிசனம் செய்தனர்.

Advertisement
 
Advertisement