Advertisement

உலக மக்கள் நன்மை வேண்டி 24 மணி நேரத்தில் 27 யாகம்

வாலாஜாபேட்டை: 24 மணி நேரத்தில் நடந்த, 27 யாகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், உலக மக்கள் நன்மை வேண்டி, 24 மணி நேரத்தில், 27 யாகம் நடந்தது. நேற்று காலை, 7:00 மணி முதல், இன்று காலை, 7:00 மணி வரை, காரிய சித்தி கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், மகா பைரவர், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, தன்வந்திரி, மகா குபேர லட்சுமி, காயத்ரி, திருஷ்டி துர்கா, நவக்கிரக, லட்சுமி என, தொடர்ந்து, 27 ேஹாமங்கள் நடந்தன. முரளிதர சுவாமிகள் துவக்கி வைத்தார். 150 வேதவிற்பனர்கள், 200 சிவாச்சாரியார்கள் ேஹாமங்கள் நடத்தினர். பங்கேற்ற பக்தர்களுக்கு,ஹோம திரவியம் வழங்கப்பட்டது.

Advertisement
 
Advertisement