Advertisement

ரத்னகிரீஸ்வரர் கோவிலில் ஆஷாட மகோற்சவம்

சென்னை:உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், பெசன்ட்நகர், ரத்னகிரீஸ்வரர் கோவிலில், ஆஷாட மகோற்சவம் நடந்து வருகிறது. சென்னை, பெசன்ட் நகரில் அமைந்துள்ளது, அராளகேசி அம்பாள் ரத்னகிரீஸ்வரர் கோவில். அங்கு, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், ஆஷாட மகோற்சவம், ஆக., 8ம் தேதி முதல், இன்று வரை நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில், நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, அர்த்தநாரீஸ்வர மகா மந்திர ஜபம், லக் ஷ ஹோமம் நடத்தப்பட்டது. நிறைவு நாளான இன்று காலை, 7:00 மணிக்கு லக் ஷ ஹோமம், சிவ ஆயுத நாமாவளி அர்ச்சனை ஆகியவை பூர்த்தி செய்யப்படுகின்றன. காலை, 11:00 மணிக்கு மகா பூர்ணாஹுதி, ரத்னகிரீஸ்வரர், அராளகேசி அம்பாளுக்கு கலசாபிஷேகமும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து, மகா தீபாராதனை நடக்கிறது. நாளை, ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு, காலை, 7:00 மணிக்கு, அராளகேசி அம்பாளுக்கு, விசேஷ அபிஷேக ஆராதனை, வளைகாப்பு அலங்காரம், சீர்வரிசை சமர்ப்பணம், மகா தீபாராதனை நடக்கிறது.

Advertisement
 
Advertisement