Advertisement

சிங்கம்புணரி சித்தர் கோயிலில் சக்தி பூஜை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் ஆடி பஞ்சமி திதி நாளான ஆக. 13-ஆம் தேதி சக்தி பூஜை நடந்தது. இதையொட்டி இரவு 10:00 மணிக்கு சித்தருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வராகி அம்மன் அலங்காரத்தில் சித்தர் முத்துவடுகநாதர் காட்சியளித்தார். இரவு 11:00 மணியளவில் ஆடு ,கோழி, சேவல் பலியிடப்பட்டு அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சித்தரையும், வராகி அம்மனையும் வழிபட்டனர்.

Advertisement
 
Advertisement