Advertisement

காளையார்கோவில் காளீஸ்வரர் கோயிலில் மஞ்சள் நீர் திருவிழா

காளையார்கோவில் : காளையார்கோவில் சொர்ணவல்லி அம்பிகா சமேத காளீஸ்வரர் கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆடிப்பூர திருவிழா கடந்த ஆக, 4 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 13 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் 8 ம் நாளில் அம்பாள் தேரோட்டம் நடைபெற்றது.ஆக., 14 ல் மாலை 7:00 மணிக்கு தபசுக்காட்சியும், நேற்று 1008 லிங்க சன்னதி அருகே சொர்ணவல்லி - காளீஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பெண்கள் சுவாமி, அம்பாளை வழிபட்டனர். கடைசி நாளான நேற்று சொர்ணவல்லி தாயார் சன்னதி அருகே மாலை 6:00 மணிக்கு மஞ்சள் நீர் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் சரவண கணேசன், சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான மேலாளர் இளங்கோ செய்துள்ளனர்.

Advertisement
 
Advertisement