Advertisement

சிதம்பரேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லுார் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சிவகாசி அம்மன் உடனுறை அருள்மிகு சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் சிவகாமி அம்பாள் மற்றும் சிதம்பரேஸ்வரர் சுவாமி கோயிலில் ஆவணி மூல உற்சவத்தை முன்னிட்டு 5 நாள் திருவிழா நடைபெறுகிறது. 3ம் நாளான நேற்று திருக்கல்யாணம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு அம்பாள் அழைப்பு நடந்தது. மதியம் 11:00 மணிக்கு, சுவாமி அம்பாள் விசேஷ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அன்னதானம் நடந்தது. மாலை சுவாமி அம்பாள் புறப்பாடு நடைபெற்றது. சுற்று வட்டாரத்திலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement
 
Advertisement