Advertisement

ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, அம்மன் உலா

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா சென்றதால், கோயில் நடை சாத்தப்பட்டது. ராமேஸ்வரம் கோயிலில் ஆக.,4ல் ஆடித்திருக்கல்யாண விழா கொடி ஏற்றப்பட்டு, விழா துவங்கியது.

ஆக.15ல் கோயிலில் சுவாமி, அம்மனுக்கு ஆடித்திருக்கல்யாண விழா நடந்தது. இதனைத்தொடர்ந்து 17ம் நாள் விழாவான நேற்று சுவாமி, அம்மன் விருந்துக்கு செல்லும் விழாவை யொட்டி நேற்று, கோயிலில் இருந்து தங்க பல்லக்கில் சுவாமி, அம்மன் புறப்பாடாகியதும் காலை 8:00 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது. பின் கோயில் ரதவீதி, திட்டக்குடி வழியாக சுவாமி, அம்மன் வீதி உலா சென்று கெந்தமாதன மண்டகபடியில் எழுந்தருளினார். வீதியெங்கும் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனர். பின் பர்வதத்தில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்ததும், அங்கிருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி இரவு 8:00 மணிக்கு கோயிலுக்கு திரும்பியதும், நடை திறக்கப்பட்டது. பின் அர்த்தசாம, பள்ளியறை பூஜை முடிந்ததும் மீண்டும் கோயில் நடை சாத்தப்பட்டது.

Advertisement
 
Advertisement