Advertisement

ராமநாதபுரம் அருகே வழுதூர் அருளொளி விநாயகர் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வழுதூர் அருளொளி விநாயகர் கோயில் 51 வது ஆண்டு சதுர்த்தி விழாவை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை நடந்தது.

இக்கோயிலில் சதூர்த்தி விழா செப்., 4 ல் காப்பு கட்டுடன் துவங்கியது. தினமும் விழா நாட்களில் விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை நடந்தது. நேற்று (செப்.,13ல்) உலக நன்மை, நல்ல மழை வேண்டி சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட 108 திருவிளக்கு பூஜை நடந்தது. காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம் எடுத்து விநாயகருக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து சுவாமிக்கு 21 வகையான அபிஷேகம் தீபாரதனை நடந்தது. ஆசிரியர் ஆறுமுகம், மருத்துவர் சந்திரசேகர், ஈஸ்வர சரவணன், மின் வாரிய மோகன் ராஜா, மூர்த்தி, துரை, தினகர் உள்ளிட்ட அருளொளி மன்ற நிர்வாகிகள் ஆன்மிக சொற்பொழிவு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

Advertisement
 
Advertisement