Advertisement

வானூர் வில்வ வனநாதர் கோவிலில்108 சங்காபிஷேகம்

வானூர்:வானூர் அருகே வில்வ வனநாதர் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு நேற்று (டிசம்.,3ல்) 108 சங்காபிஷேகம் நடந்ததுவானூர் அடுத்த வில்வநத்தம் கிராமத்தில் உள்ள வில்வவனநாதர் கோவிலில், கார்த்திகை மூன்றாம் திங்கள் சோமவாரத்தை முன்னிட்டு நேற்று (டிசம்., 3ல்) காலை 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனித நீர், ஆன்ஐந்து, மூத்த பிள்ளையார், திருமகள் வழிபாடு மற்றும் புனிதநீர் குடம் நிலை நிறுத்துதல் நடந்தது.

தொடர்ந்து, காலை 8 மணிக்கு வில்வவன நாதருக்கு சிறப்பு திருமஞ்சனமும், வேள்வி நடைபெற்றது. 9.15 மணிக்கு வேள்வி நிறைவு பெற்று, மலர் போற்றி திருமுறை விண்ணப்பம், பேரோளி வழிபாடு, 108 சங்குகள் மற்றும் புனிதநீர் குடம் புறப்பாடு நடந்தது.காலை 10 மணிக்கு வில்வவன நாதருக்கு திருக்குட நன்னீராட்டுதல், 108 வலம்புரி சங்குகளால் நன்னீராட்டுதல், சிறப்பு அலங்காரம், பேரோளி வழிபாடு, திருமுறை விண்ணப்பம், அருளாளர் அமுதல் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தது.

Advertisement
 
Advertisement