குமாரபாளையம்: கத்தேரி, கண்ணனூர் மாரியம்மன் கோவிலில், திருவிழாவையொட்டி தீர்த்தக்குட ஊர்வலம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. குமாரபாளையம் அருகே, கத்தேரி மாரியம்மன் கோவிலில், திருவிழாவையொட்டி, கடந்த, 4ல் பூச்சாட்டுதல் நடந்தது. நேற்று முன்தினம் இரவு, ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம்; நேற்று, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனை நடந்தது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பொங்கல் வைத்து வழிபட்டனர். மாவிளக்கு மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்து, அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் வளாகம் முழுவதும் மாவிலை தோரணம், வாழை மரங்கள் கட்டப்பட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
கத்தேரி மாரியம்மன் திருவிழா கோலாகலம்
பதிவு செய்த நாள்: டிச 12,2018