Advertisement

வரதராஜ பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு

ராசிபுரம்: ராசிபுரம் பெருமாள் கோவிலில், இன்று சொர்க்க வாசல் திறப்பு நடக்கிறது. ராசிபுரம், மேட்டுத் தெருவில் பிரசித்தி பெற்ற பொன் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கோவில் சொர்க்க வாசல் இன்று திறக்கப்படுகிறது. விடியற்காலை முதல், நீண்டவரிசையில் பக்தர்கள் காத்திருப்பர். இதற்காக, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு வழங்க, ஜனகல்யாண் அமைப்பு சார்பில், கடந்த, 27 ஆண்டுகளாக லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்தாண்டும், 1,000 கிலோ கடலை மாவு, 50 கிலோ சர்க்கரை, 1,000 லிட்டர் கடலை எண்ணெய், 25 கிலோ திராட்சை, முந்திரி, ஏலக்காய், நெய் ஆகியவற்றை பயன்படுத்தி, 60 ஆயிரம் லட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை, இ.ஓ., ராஜகோபால், ஆய்வாளர் செல்வி ஆகியோர் செய்து வருகின்றனர். பட்டணம், கரியபெருமாள் கோவிலிலுல், சொர்க்க வாசல் திறக்கப்படவுள்ளது. ஏற்பாடுகளை அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

Advertisement
 
Advertisement