Advertisement

தி.நகரில் தர்ம உபநயனம்

சென்னை:தி.நகர், சிருங்கேரி பாரதி வித்யாஷ்ரம் சேவா சமிதி சார்பில், தர்ம உபநயனம் நடக்க உள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு பாரதி தீர்த்த மகா சுவாமிகளின் ஆசியுடன், தி.நகர், வெங்கட் நாராயணா சாலையில் உள்ள, சிருங்கேரி பாரதிய வித்யாஷ்ரம் சேவா சமதி சார்பில், தர்ம உபநயனம், பிப்., 17ல் நடக்க உள்ளது.விருப்பமுள்ள சிறார்களின் பெற்றோர், இதற்கான விண்ணப்பங்களை, சமதியில், ஒவ்வொரு சனிக்கிழமை, மாலை, 4:00 மணி முதல், 6:30 வரையும்; ஞாயிறு காலை, 10:00 மணி முதல், 12:30 மணி வரை, நேரில் பெற்றுக் கொள்ளலாம். மேலும், தகவல்களுக்கு, அனந்த நாராயணன்: -044 - 2474 0053, சங்கரன்-: 98407 80809 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
 
Advertisement