Advertisement

பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில் கூடாரவல்லி விழா

மோகனூர்: மோகனூர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், கூடாரவல்லி விழா நடந்தது. இதை முன்னிட்டு, பத்மாவதி தாயார் சமேத, கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண கோவிலில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு, பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, கோவில் உள் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பூக்கூடாரத்தில், பெருமாள் - ஆண்டாள் திருக்கல்யாணம் விமரிசையாக நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, ஆண்டாள் - பெருமாள் ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement
 
Advertisement