Advertisement

குருவாயூர் கோவில் உற்சவம் ஆரம்பம்

பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உற்சவம், யானைகள் ஓட்டத்துடன் துவங்கின. தெற்கு கோபுர வாசல்கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவில் உற்சவம, நேற்று (பிப்., 17ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக, 26 யானைகள் பங்கேற்ற, யானையோட்டம் நிகழ்ச்சி நடந்தது.கோபி கண்ணன், நந்தன், பெரிய விஷ்ணு, அச்சுதன் ஆகிய யானைகள் முன்வரிசையில் நின்று, போட்டிபோட்டு ஓடின. தெற்கு கோபுர வாசல் வழியாக கோவிலுக்குள் நுழைந்த கோபி கண்ணன் யானை, வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஏழு முறை: இதையடுத்து, கோபி கண்ணன் யானை ஏழு முறை வலம் வந்து, மூலவரை வணங்கி நின்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற யானைகளுக்கு, யானையூட்டும் எனப்படும், உணவு வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.

Advertisement
 
Advertisement