Advertisement

வெங்கடாசலபதி கோயிலில் திருக்கல்யாணம்

சாத்துார் : சாத்துார் ஸ்ரீ வெங்கடாசலபதி கோயில் திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். இந்நிகழ்ச்சி நேற்று காலை 10:00 மணிக்கு நடந்தது.

வெங்கடாசலபதி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாப்பிள்ளை அழைப்பு நடந்தது. இதன் பின் நேற்று காலை 10:00 மணிக்கு சர்வ அலங்காரக்தில் மண மேடைக்கு ஸ்ரீவெங்கடாசலபதி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் சுவாமிகள் எழுந்தருளினர். பட்டர்கள் மந்திரம் கூற 12:10 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. பெண் பக்தர்கள் புதுமாங்கல்யம் மாற்றிக் கொண்டனர். திருமண விருந்தில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர். கீர்த்தனைகள் பாடப்பட்டது. ராமகிருஷ்ண பஜனை தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாணத்தில் சாத்துார், வெங்கடாசலபுரம், சடையம்பட்டி, படந்தால், ஒ.மேட்டுப்பட்டி, சத்திரப்பட்டி பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Advertisement
 
Advertisement