Advertisement

வெங்கடேஷப் பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம்

திருப்பரங்குன்றம்: மதுரை விளாச்சேரி பூமி நிலா சமேத வெங்கடேஷப் பெருமாள் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது. சிறப்பு யாக பூஜை முடிந்து மூலவர்கள், உற்ஸவர்களுக்கு புனிதநீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. தாசில்தார் செல்வராஜ், வி.ஏ.ஓ., கார்த்திக் மற்றும் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.


Advertisement
 
Advertisement