Advertisement

மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)

தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரத்திற்கான பலன் ..

உத்திராடம்2,3,4ம் பாதம்: தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரால் நன்மை அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டத்தால் பணம் சேரும். எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தந்தை, அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். 2019 அக்டோபர் முதல் வாழ்வில் இனிய அனுபவம் காண்பீர்கள். பிள்ளைகள் கல்வியில் வளர்ச்சியடைவர்.

திருவோணம்: அரசியல்வாதிகளின் எண்ணம் ஈடேறும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். உடன்பிறந்தவரால் உதவி உண்டு. திரவப் பொருட்கள் மூலம் லாபம் வரும். புதிய சொத்து, ஆடம்பர பொருட்கள் சேரும். நண்பர்கள் ஓரளவு உதவுவர். 2019 அக்டோபர் முதல் அலைச்சல் ஏற்பட்டாலும் அதற்கான பலன் கிடைக்கும். எதிர்பாராத வருமானம் கிடைக்கும்.

அவிட்டம்1,2ம் பாதம்: கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்பு தேடி வரும். அடிக்கடி விருந்து, விழாக்களில் பங்கேற்பீர்கள். குடும்ப நலனில் அக்கறை காட்டுவீர்கள். வருமானம் எதிர்பார்த்ததை விட அதிகம் வரும். 2019 அக்டோபர் முதல் திடீர் பயணம் செல்ல நேரிடும். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பலன் கிடைக்கும். ஆனால் அது பற்றி தேவையில்லாத மனக்குறை உள்ளது உங்களுக்கு.

Advertisement
 
Advertisement