Advertisement

திருப்பந்தியூர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

திருப்பந்தியூர்: கடம்பத்தூர் ஒன்றியம், திருப்பந்தியூர் கிராமத்தில் உள்ளது லட்சுமி நாராயண பெருமாள் கோவில். இங்கு, நாளை, (மே., 16ல்)திருக்கல்யாணமும், மறுநாள், வைகாசி விசாக கருடசேவை உற்சவமும் நடைபெற உள்ளது.

முன்னதாக, நாளை (மே., 16ல்) காலை, 11:00 மணிக்கு, லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருமஞ் சனம் நடைபெறும். பின், மாலை, 6:00 மணிக்கு மேல், 8:00 மணிக்குள், ஸ்ரீதேவி, பூதேவி, லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.அதன் பின், மறுநாள், காலை, 5:00 மணிக்கு, கருட வாகனத்தில் மலர் அலங்காரத்தில் லட்சுமி நாராயண பெருமாள் வீதியுலா நடைபெறும். அதை தொடர்ந்து, மாலை, 5:00 மணிக்கு மேல், கோவில் வளாகத்தில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகமும், பவுர்ணமி சிறப்பு திருமஞ்சனமும் நடைபெறும். அதன்பின், மாலை, 7:00 மணிக்கு, சிறப்பு மலர் அலங்காரத்தில், பஞ்சமுக ஆஞ்சநேயர் உள்புறப்பாடு நடைபெறும்.

Advertisement
 
Advertisement