Advertisement

மழை வேண்டி அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த மல்லப்பாடி கிராமத்தில், கடுமையான வறட்சி நிலவி வருகிறது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும், கால்நடைகளுக்கு போதிய தீவனமும் கிடைக்காத நிலை உள்ளது. இதையடுத்து அப்பகுதி கிராம மக்கள், ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி மழை வேண்டி மாரியம்மனுக்கு கூழ் ஊற்றி, பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இதில், மேள தாளங்கள் முழங்க, 200க்கும் மேற்பட்ட பெண்கள் கஞ்சி கலயத்தை ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வந்தனர். பின்னர், மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

Advertisement
 
Advertisement