Advertisement

காஞ்சிபுரம் கோவிந்தசுவாமி குரு பூஜை விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த, முத்தியால்பேட்டையில், துறவு நிலை பெற்று பல ஆண்டுகள் வாழ்ந்தவர் மலையாளசுவாமிகள். பொட்டிசாமி என்ற பிரம்மானந்த சுவாமிகளை தொழுது, கோவிந்தசுவாமி என்ற பெயர் பெற்று, சமாதி அடைந்தார்.இவரது, 66ம் ஆண்டு, குருபூஜை விழா, முத்தியால்பேட்டை, பொட்டிசாமி சித்தர் பீடத்தின் அருகில் உள்ள கோவிந்தசுவாமிகள் சமாதியில் நடந்தன. இதில், லிங்கமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகமும், மஹாதீபாராதனையும் நடந்தது.

Advertisement
 
Advertisement