Advertisement

வெயிலுகந்தம்மன் கோயில் பொங்கல் விழா

விருதுநகர்: விருதுநகர் பராசக்தி வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். இக்கோயில் பொங்கல் விழா ஜூன் 4 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். நேற்று நடந்த பொங்கல் விழாவில் விருதுநகர் சுற்று கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் பலர் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவில் தங்க குதிரை வாகனத்தில் அம்மன் நகர்வலம் வருதல் நடந்தன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று கயிறுகுத்து, அக்னிசட்டி, கரகம் எடுத்தல் நடக்கிறது. இதில் பக்தர்கள் பல்வேறு வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவர். இதை தொடர்ந்து பல்சுவை கதம்ப நிகழ்ச்சி, இரவில் அம்மன் ரிஷப வாகனத்தில் நகர்வலம் வருதல் நடக்கிறது. நாளை வெயிலுகந்தம்மன், மாரியம்மன் தேரில் பவனி வரும் தேரோட்டம் நடக்கிறது.

Advertisement
 
Advertisement