Advertisement

மேலூர் துரோபதையம்மன் கோயில் பூக்குழி திருவிழா

மேலூர்: மேலூர் துரோபதையம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.மே 17 ல் கொடியேற்றத்துடன் இத்திருவிழா துவங்கியது.

பக்தர்கள் காப்பு கட்டி 27 நாட்கள் விரதமிருந்தனர். மழை பெய்து எல்லா வளமும் கிடைக்கவும், நோய் நொடியின்றி அனைவரும் வாழவும் வேண்டி பதினெட்டு கிராம பக்தர்கள் பூக்குழி இறங்கினர். நகை மற்றும் அடகுகடை முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் அன்னதானம் நடந்தது. விழாவில் மேலூரை சுற்றியுள்ள 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (ஜூன் 12) மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

Advertisement
 
Advertisement