Advertisement

பிரதிஷ்டை தின பூஜைகள் முடிந்து சபரிமலை நடை அடைப்பு

சபரிமலை: பிரதிஷ்டை தின பூஜைகள் முடிந்து, சபரிமலை நடை, நேற்று (ஜூன் 12) இரவு அடைக்கப்பட்டது. ஆனி மாத பூஜைகளுக்காக, நாளை மறுநாள் (ஜூன் 15) மாலை, நடை திறக்கப்படுகிறது.

பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக, சபரிமலை நடை, நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. நேற்று காலை, நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை நடந்தது. தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரதிஷ்டை தின கலச பூஜை நடத்தினார். இரவு, 7:00 மணிக்கு, படிபூஜை நடைபெற்றது. இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்பட்டது. நாளை மறுநாள் மாலை, 5:00 மணிக்கு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, நடை திறக்கிறார். 16- முதல் 20-ம் தேதி வரை, ஐந்து நாட்கள், ஆனி மாத பூஜை நடைபெறும்.

Advertisement
 
Advertisement