Advertisement

சின்னாண்டிக்குழி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சத்திரம்: சின்னாண்டிக்குழி அமிர்தவள்ளி அம்மன் கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு அம்மன் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9.00 மணிக்கு அமிர்தவள்ளி அம்மன், முருகன், வள்ளி, தெய்வானை சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலை சுற்றி வலம் வந்ததனர். இரவு 10.00 மணிக்கு முருகன்,வள்ளி, தெய்வானை, விநாயகர், அமிர்தவள்ளி அம்மன் சுவாமிகளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement
 
Advertisement