Advertisement

ராமநாதபுரம் சொக்கநாத சுவாமி கோயிலில் வருண பூஜை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மீனாட்சி சமேத சொக்க நாதசுவாமி கோயிலில் மழை வேண்டி வருண பூஜை, யாகம். நந்திக்கு சிறப்பு அபிேஷகம்நடந்தது.

ராமநாதபுரம் தேவஸ்தானம் மீனாட்சி சமேத சொக்கநாதசுவாமி கோயிலில் நேற்று காலை மழை வேண்டி வருண பூஜை, யாகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நந்தி ஈஸ்வரருக்கு பால், பழம், இளநீர், பன்னீர் உட்பட பல்வேறு சிறப்பு அபிேஷகங்கள் நடந்தது. பின் நந்தியை சுற்றிலும் கட்டுமானம் செய்யப்பட்டு, அதில் நீர் நிரப்பி, நந்தியை மூழ்க செய்தனர். இந்த சிறப்பு வழிபாடுகளை மனோகரகுருக்கள் செய்தார். ஏற்பாடுகளை நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் சங்கர், விசாரணைதாரர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

Advertisement
 
Advertisement